தமிழ்நாடு

பா.ம.க சார்பில் புதுவையில் 23-ஆம் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

DIN

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க பாமக சார்பில் வரும் 23ஆம் தேதி புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 23-ஆம் தேதி சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெறும். அன்று காலை  சரியாக 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை புதுச்சேரி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் இந்தப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் செயற்குழு- பொதுக்குழு கூட்டங்களுக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்  பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

செயற்குழுக் கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலர்கள், பொருளாளர்கள், அணிகளின் மாநிலச் செயலர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல், புதுவை மாநிலத்திலுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகளும் இப்பொதுக்குழுவில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT