முகப்பு
தமிழ்நாடு

கூட்டணி குறித்து இனிதான் பேச்சுவார்த்தை: கமல்ஹாசன்

கூட்டணி தொடர்பாக இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:46 am IST
பகிர்:


கூட்டணி தொடர்பாக இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களை வாங்கும் பணி தொடங்கிவிட்டது. பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உரிய ஆலோசனை நடத்திய பிறகே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இல்லாத சமூக ஆர்வலர்கள், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களும் மனு அளிக்கலாம். மக்கள் அறிவுரையின்படியே நாங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்.
ரஜினிகாந்த் தற்போது வாழ்த்துதான் தெரிவித்துள்ளார்; இனிதான் ஆதரவு தரவேண்டும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன். கூட்டணி தொடர்பாக இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் அவர்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சியுடன்  பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு சிலர் எங்களுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நல்லவர்கள் எங்களுடன் நிற்பர். ஆதரவு அளிப்பர். மக்களவைத் தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 5-ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்று, அளிக்கலாம். 
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம் என்றார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் சிலர் திங்கள்கிழமை விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.