தமிழ்நாடு

மதுபாட்டில்களை வாங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா?: உயர் நீதிமன்றக்   கிளை கேள்வி 

DIN

மதுரை: வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் பார் உரிமங்களை புதுப்பிப்பதை நிறுத்தி வைக்க கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது:

மதுக்கடைகளில் வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக் கூடாது?;  டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதை மட்டும் வைத்துக்கொள்ளலாமே?

இவ்வாறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் இந்த வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12-ல் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT