தமிழ்நாடு

இம்மாத இறுதியில் மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் மணிகண்டன்

DIN


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் மடிக்கணினி வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கீதா ஜீவன் பேசும்போது, மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
அப்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் குறுக்கிட்டுக் கூறியது:
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக 15 லட்சம் மடிக்கணினிகள் வாங்குவதற்கு நடவடிக்கை முடிந்துள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT