தமிழ்நாடு

கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

DIN

கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கஜா புயல் பாதிப்பு குறித்து, சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அப்போது, அதிமுக
அரசு தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி, மத்திய அரசிடமிருந்து புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடுதல் நிவாரணத் தொகையை பெற வேண்டும் என திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேசினார். 

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலின் போது 471 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. 

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கான இழப்பீடு நிவாரணத் தொகையை ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும். சாலை மார்க்கமாக சென்றால் அனைத்து பகுதிகளையும் பார்க்க முடியாது என்பதால் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

SCROLL FOR NEXT