தமிழ்நாடு

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து 8வது நாளாக இன்றும் (ஜன.18) அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை

DIN


சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து 8வது நாளாக இன்றும் (ஜன.18) அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று வியாழக்கிழமை (ஜன.17) ரூ. 73.15-ஆக இருந்த பெட்ரோல் விலை லிட்டருக்கு 08 காசுகள் அதிகரித்து இன்று வெள்ளிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.23 ஆகவும், ரூ. 68.42 ஆக இருந்த டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.68.62-க்கும் விற்பனையாகி வருகிறது. 

கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07 ஆக இருந்தது. இப்போது ஒரு லிட்டருக்கு ரூ.2.016 அதிகரித்துள்ளது. டீசலைப் பொறுத்தவரையில் 5 நாள்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.66.01 ஆக இருந்தது. இப்போது ரூ.2.061 அதிகரித்துவிட்டது.

கடந்த ஒன்றரை மாதமாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது மீண்டும் தொடர்ந்து 8வது நாளாத அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT