தமிழ்நாடு

தூத்துக்குடியில் புதுமண காதல் தம்பதி வெட்டிப் படுகொலை: பெண்ணின் தந்தை கைது

ENS


தூத்துக்குடி: பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் தம்பதி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சோலைராஜ் (23), பேச்சியம்மாள் என்கிற ஜோதி (20) இருவரும் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டு பெரியார் காலனியில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், சோலைராஜ் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஜோதி பள்ளர் சமுதாயப் பெண். இரண்டு ஜாதியும் எஸ்.சி. பிரிவில் வந்தாலும், மக்களின் மனப்பான்மையில் பறையரை விட பள்ளர் சற்று உயர்ந்த ஜாதியாகக் கருதப்படுகிறார்கள். இந்த நிலையில்தான், பறையர் ஜாதியைச் சேர்ந்த சோலைராஜை, பள்ளர் இனப் பெண் ஜோதி திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் தந்தையே ஆணவப் படுகொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தம்பதியின் உடல்கள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT