தமிழ்நாடு

சேலம் திமுக எம்பி பார்த்திபன் மீது வழக்குப்பதிவு 

DIN

கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக எம்.பி பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மக்களவைத்தொகுதி திமுக எம்பி பார்த்திபன். சேலம் வேடங்கரடு மலைப்பகுதியில் கள தணிக்கைக்குச் சென்ற வனக்காவலர்களுக்கு இவர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து எம்.பி பார்த்திபன் மற்றும் அவரது சகோதர்கள் என 4 பேர் மீது அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனச்சரகர் திருமுருகன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த எம்பி பார்த்திபன் தன் மீது அவப்பெயரை உண்டாக்கவே தேவையின்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT