தமிழ்நாடு

தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை 

தமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

தமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக கடந்த 15ஆம் தேதி 14 பேர் தில்லியில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, நெல்லை மேலப்பாளையத்தில் முகமது இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

சோதனை காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேனி மாவட்டத்தில் கோம்பை பகுதியில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது வீடுகளிலும் சென்னையில் கொத்தவால் சாவடியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT