தமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக கடந்த 15ஆம் தேதி 14 பேர் தில்லியில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, நெல்லை மேலப்பாளையத்தில் முகமது இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேனி மாவட்டத்தில் கோம்பை பகுதியில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது வீடுகளிலும் சென்னையில் கொத்தவால் சாவடியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.