சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் சொத்துகளின் நிர்வாகிகளாக தங்களை நியமிக்கக் கோரி, அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தால் அதனை திரும்ப செலுத்தத் தயார் என்று தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.