தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சுமார் 130 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருமான வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து இந்நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.