தமிழ்நாடு

தொரட்டி திரைப்பட நாயகி மாயம்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

DIN


மாயமான தொரட்டி திரைப்பட நாயகி சத்யகலாவை மீட்டுத் தரக் கோரி  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து பொள்ளாச்சி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷமன் மித்ரு தாக்கல் செய்த மனுவில், ஷமன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தொரட்டி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தத் திரைப் படத்தை நான் தயாரித்து நடித்துள்ளேன். இந்தப் படத்தில் சத்யகலாவும் நடித்துள்ளார். திரைத் துறையில் சத்யகலா  பணியாற்றுவதில், அவரது தந்தை ரத்தினத்துக்கு விருப்பமில்லை. இதனால் சத்யகலாவுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முயற்சிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சத்யகலா திடீரென மாயமாகி உள்ளார்.
இதுகுறித்து படத் தயாரிப்புக்குழு சார்பில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அந்தப் புகாரின் மீது போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சென்னையில் உள்ள சத்யகலாவின் வீட்டிலும் யாரும் இல்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே ரத்தினத்தின் சட்ட விரோத காவலில் உள்ள நடிகை சத்யகலாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் இந்து கருணாகரன் ஆஜராகி, படப்பிடிப்பு நிறைவடைந்து, திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் நாயகி சத்யகலா மாயமாகி விட்டதால், திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பொள்ளாச்சி பகுதி காவல் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT