முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் மோடியும், ராகுலும் ஒரே நாளில் கேரளாவுக்கு படையெடுப்பது ஏனோ?

பிரதமர் மோடியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலும் இன்று ஒரே நாளில் கேரளாவுக்கு பயணம் மேள்கொள்கின்றனர்.

Updated On : 7 ஜூன், 2019 at 11:11 AM
பகிர்:


கொச்சி: பிரதமர் மோடியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலும் இன்று ஒரே நாளில் கேரளாவுக்கு பயணம் மேள்கொள்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் உள்ள விமானப் படை விமான நிலையத்துக்கு இன்று முற்பகல் 11.35க்கு வருகிறார். அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் சென்று நாளை காலை ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ளவிருக்கிறார். நாளை பிற்பகல் 2 மணிக்கு தில்லிக்கு திரும்புகிறார்.

இன்று வயநாடுக்கு வரும் ராகுல் காந்தி அங்கு 2 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற வைத்த வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல் இன்று கேரளா வருகிறார்.

பிற்பகலில் காலிகட் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் ராகுல், நாளை வயநாடு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.