குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, நாகை மாவட்டம், திருக்குவளை பகுதியில் புதன்கிழமை விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
குறுவை சாகுபடி நிகழாண்டும் பொய்த்த நிலையில், சம்பா சாகுபடிக்காவது கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நாகை மாவட்டம், திருக்குவளை பகுதியில், விவசாயிகள் கண்ணீருடன் அப்பகுதியில் உள்ள கதவணைக்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்குவளையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு விவசாயி தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.