தமிழ்நாடு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு 

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரியான அளவில் மழை பெய்யாத காரணத்தால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்   தற்போது கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. வரும் பருவமழைக்காலமாவது தேவையான நீரை அளிக்கும் என்று அனைவரும் ஏக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளியன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளுக்கு என ரூ.499.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடியும், திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடியும்   ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT