தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெற உள்ளது. இந்த விழாவில் இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர் படிப்புகளை நிறைவு செய்த 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.
சிறப்பிடம் மற்றும் தங்கப் பதக்கம் பெற்ற 139 மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக பட்டங்களை வழங்கி கெளரவிக்கிறார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் ஹிமாச்சலப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்ற உள்ளார். சுகாதாரத் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான சி.விஜயபாஸ்கர், துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பதிவாளர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.