தமிழ்நாடு

ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

DIN

சென்னை: வருமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில்  2 ஆயிரம் ரூபாய் நிதி தொடர்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர். 

இதோபோன்று சென்னை சாந்தோம் அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT