தமிழ்நாடு

அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு

DIN


மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: 
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறோம். அதிமுகவுடன் எங்கள் கட்சியை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை 3 மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.  எங்களின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர். இப்போது தேர்தல் நேரம் என்பதால், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. தேர்தல் முடிந்த பிறகு இணைப்பு குறித்து பேச்சு நடத்தப்படும். அதிமுகவிடம் இருந்து எந்தப் பொறுப்பையும் நான் கேட்கவில்லை.
மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தால் பிரசாரம் செய்வேன். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தேன். அது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT