தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. 5 இடங்களில் பாஜக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா கூறியதாவது:
பாஜகவின் மகா கூட்டணியால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் ஆசை பொய்த்துப்போனது. அதிமுக கூட்டணி 40 தொகுகளிலும் வெற்றிபெற பாஜக பாடுபடும் என்று தெரிவித்தார்.