முகப்பு
தமிழ்நாடு

தேர்வு முறைகேடு: அண்ணா பல்கலை. மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

அண்ணா பல்கலைக்கழகம் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் புகார் தரப்பட்டதால்,

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:


அண்ணா பல்கலைக்கழகம் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் புகார் தரப்பட்டதால், பொறியியல் கல்லூரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எந்த கல்லூரிகளிலும் அவருக்கு பணி வழங்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் ஆசிரியர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியிட்டதாகவும் புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் புகார் தரப்பட்டதால், பொறியியல் கல்லூரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.