தமிழ்நாடு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டதால் வெய்யில் வாட்டி வருகிறது. அதுவும் திங்களன்று சில இடங்களில் காலை 8 மணி அளவிலேயே வெயில் 100 டிகிரியைத் தொட்டு விட்டது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திங்களன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல்  காற்று வீசும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டி மீட்டரும், வேலூரில் 5 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெறுழ்வீ மலர்ந்தன... தமன்னா!

அலாதி உற்சாகத்தில்... நிகிதா!

என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர்புறத்திலும் கேள்வி கேட்க வேண்டும்: செந்தில்பாலாஜி

பாடகர் ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொலை? விரைவில் உண்மை அம்பலமாகும்: அஸ்ஸாம் முதல்வர்

இருமல் மருந்து விவகாரம்! பரிந்துரைத்த மருத்துவர் கைது!

SCROLL FOR NEXT