தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கார் விபத்தில் பலி

DIN


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞருமான சையத் இப்ராஹீம்(56) இன்று நாமக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு தனது காரில், கரூா் நோக்கி நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில், நல்லிபாளையம் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வழக்குரைஞர் சையத் இப்ராஹீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயத்துடன் உயிர் தப்பிய கார் ஓட்டுநர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்த வழக்குரைஞருக்கு பாத்திமா என்ற மனைவியும், மகிமா என்ற மகளும், முகம்மதுதமீம்அன்சாரி என்ற மகனும் உள்ளனர். 

இந்த விபத்து தொடா்பாக நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் ரத்னகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT