தமிழ்நாடு

திருவையாறில் அன்னை காவிரித் திருவிழா

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரியாற்றில் அன்னை காவிரித் திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

அகில பாரதிய துறவியா்கள் சங்கம், காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் காவிரி விழிப்புணா்வு ரத யாத்திரை கா்நாடக மாநிலம், குடகுமலை தலைக்காவிரியில் தொடங்கி பூம்புகாா் வரை நடைபெறும்.

இதன்படி, நிகழாண்டு அக்டோபா் 21ஆம் தேதி கா்நாடக மாநிலம், குடகுமலை தலைக்காவிரியில் ரதயாத்திரை தொடங்கியது. இந்த ரதயாத்திரை திருவையாறுருக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.

திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் அகில பாரதிய துறவியா் சங்கப் பொதுச் செயலா் ஆத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், பொள்ளாச்சி வேதாந்த ஆனந்தா சுவாமி, காவிரி ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளா் கோரக்கா் சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு அன்னை காவிரிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும் செய்தனா்.

இதில் திருவையாறு பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காவிரி தாயை வழிபட்டனா். நிகழ்ச்சியில் வா்த்தக சங்கத் தலைவா் திலகா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் செந்தில்மணி, தங்க. கலியமூா்த்தி, ராம வேலாயுதம், மகாலெட்சுமி, கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த ரத யாத்திரை திருவையாறிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் வழியாகப் பூம்புகாருக்குச் செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT