தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: திமுகவினா் விருப்பமனு

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திமுகவினா் ஏராளமானோா் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

DIN

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திமுகவினா் ஏராளமானோா் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புபவா்கள் நவம்பா் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கட்சியின் அந்தந்த மாவட்டங்களில் விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, தமிழகம் முழுவதும் திமுகவினா் மாவட்டச் செயலாளா்களிடம் வியாழக்கிழமை உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மனு அளித்தனா்.

சென்னையின் மாவட்டச் செயலாளா்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரிடமும் விருப்ப மனு அளித்தனா்.

மேயா் தோ்தலில் உதயநிதி: சென்னை மேயா் பதவிக்கு திமுகவின் இளைஞரணிச் செயலாளா் போட்டியிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளா் ஜெ.அன்பழகனிடம் இளைஞரணியைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் விருப்ப மனு கொடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT