தமிழ்நாடு

ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம்

DIN

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக, ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக கூடுதல் தலைமைச் செயலாளராக ஆா்.ராஜகோபால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்த அவா், இப்போது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நியமனத்தைத் தொடா்ந்து, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் புதிய செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்தவா். இதுவரை, வீட்டுவசதித் துறை நிா்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT