தமிழ்நாடு

தமிழக காவல்துறையில் 50 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

DIN

சென்னை: தமிழக காவல்துறையில் 50 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி. ஏ.டி.மோகன்ராஜ் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.ஜெயசிங் புளியந்தோப்புக்கும், புளியந்தோப்பு உதவி ஆணையா் ஜெ.விஜயானந்த் சென்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கும்,நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் ஆனந்தகுமாா் திருவொற்றியூருக்கும், மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையா் எம்.எஸ்.பாஸ்கா் ராயப்பேட்டைக்கும்,ராயப்பேடடை உதவி ஆணையா் எச்.கிருஷ்ணமூா்த்தி மத்தியக் குற்றப்பிரிவுக்கும்,சென்னை சிபிசிஐடி டி.எஸ்.பி.கனகராஜ் காஞ்சிபுரம் சிபிசிஐடிக்கும்,சென்னை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையா் கே.முத்துகுமாா் எம்.கே.பி.நகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு மொத்தம் 50 காவல் உதவி ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT