தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சரின் பதவி நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

DIN

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பதவி நியமனத்தை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கப்பட்டார்.

அவரது நியமத்தை எதிர்த்து வனபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பச்சமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  

இந்த வழக்கில் நீதிமன்றம் வியாழன்று தீர்ப்பளித்தது. அதன்படி அக்ரி க்ரிஷ்ணமுர்த்தியின் பதவி நியமனத்தை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளது.

அத்துடன் சங்க விதிகளுக்கு முரணாக தேர்தலை நடத்தாமல் அவரை நியமனம் செய்தது செல்லாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT