பதாகை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி 
தமிழ்நாடு

மோடி - ஜின்பிங் சந்திப்பு: பொதுமக்களுக்கு இடையூறின்றி பதாகை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, அவர்களை வரவேற்று பதாகை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

DIN


சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, அவர்களை வரவேற்று பதாகை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தில், வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்று பதாகை வைக்க அனுமதி கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்ல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மோடி - ஜின்பிங் நிகழ்ச்சியை வரவேற்று பதாகை வைக்க அனுமதி அளித்ததோடு, பொதுமக்களுக்கு இடையூறின்றி சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலைகளில் வரவேற்பு பதாகைகளை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரையரங்குகளில் வெளியாகும் ரஜினி - கமல் கூட்டணியின் புதிய பட புரோமோ!

அன்புடன் சென்னை.. ஆப்கனில் விளையாடியது போன்ற உணர்வு.. ரஷீத்கான் நெகிழ்ச்சி!

வங்கதேசத்தின் 43 புதிய எம்.பி.க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு!

#Shorts | யார் இந்த யுவராஜ் சாம்ரா? | Yuvraj Samra | Canada | T20 World Cup 2026 | Chepauk |

பாஜக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது: தவெக நிர்வாகி அருண்ராஜ்

SCROLL FOR NEXT