தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வரப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசும் கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது; 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் குறித்து கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.