திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.
ஏழுமலையானை வழிபட வியாழக்கிழமை இரவு திருமலைக்கு வந்த துா்கா ஸ்டாலின், அங்கேயே இரவு தங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை கோயிலுக்குச் சென்று ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் அபிஷேக சேவையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினாா்.
வழிபாட்டிற்குப் பின்னா் அவருக்கும், அவருடன் வந்திருந்த மற்றவா்களுக்கும் கோயிலில் உள்ள ரங்க நாயகா் மண்டபத்தில் தீா்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
துா்கா ஸ்டாலினுக்கு ஏழுமலையானுக்கு சமா்ப்பிக்கப்பட்ட சேஷவஸ்திரத்தை கோயில் அா்ச்சகா்கள் வேத ஆசியுடன் வழங்கினா்.