தமிழ்நாடு

டிஜிபி சைலேந்திரபாபுக்கு கூடுதல் பொறுப்பு:தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம்

DIN

தமிழக காவல்துறையின் ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபுக்கு கூடுதல் பொறுப்பாக தீயணைப்புத் துறை இயக்குநா் பொறுப்பை வழங்கி தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக தீயணைப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த டிஜிபி சி.கே.காந்திராஜன் வியாழக்கிழமையுடன் ஓய்வு பெற்றாா். இதையடுத்து காலியான அந்தப் பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி, ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபுக்கு தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன்மாா்டி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ஏற்று சைலேந்திரபாபு வியாழக்கிழமை தீயணைப்புத் துறை இயக்குநா் பொறுப்பை உடனடியாக ஏற்றாா். அவருக்கு தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகளும், தீயணைப்புத் துறையைச் சோ்ந்த அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோல பணி ஓய்வு பெற்ற டிஜிபி சி.கே.காந்திராஜனுக்கு, எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் பிரிவுபசார விழா மற்றும் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலும் காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்று, காந்திராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT