தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் பதவி: தமிழிசை சவுந்திரராஜன் ராஜிநாமா 

DIN

சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ஞாயிறு மதியம் ராஜிநாமா செய்தார் .

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று நியமிக்கப்பட்டார். தெலங்கானா மற்றும் ஆந்திராவின்  ஒருங்கிணைந்த ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வந்த நிலையில், தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பு ஞாயிறு காலை வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ஞாயிறு மதியம் ராஜிநாமா செய்தார் .

2014 - ஆம் ஆண்டு முதல் பாஜக மாநிலத் தலைவராக தமிழிசை செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்ததாக யார் தலைமைப் பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி பாஜக வட்டாரங்களில் எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT