குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். 
தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலைமுதல் பெய்த தொடர் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

DIN

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலைமுதல் பெய்த தொடர் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் குறிப்பாக மலைப்பகுதியில் பெய்த தொடர் சாரல்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
அனைத்து அருவிகளிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மாலையில் அருவிகளில் தண்ணீர்வரத்து குறையத் தொடங்கியதையடுத்து, முதலில் பழைய குற்றாலம் அருவியிலும், தொடர்ந்து ஐந்தருவி மற்றும் பேரருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT