வெளிநாடு சென்று திரும்பிய முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ஓ. பன்னீர்செல்வம்
வெளிநாடு சென்று திரும்பிய முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பசுமைச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை: வெளிநாடு சென்று திரும்பிய முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பசுமைச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
14 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை தமிழகம் திரும்பினார் முதல்வர் பழனிசாமி.
அவரை வரவேற்க விமான நிலையம் செல்லாத துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.