தமிழ்நாடு

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

DIN

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்பட்டு வந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட துணை முதல்வர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக்குழுவும் செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. 

மேலும் பால் உற்பத்தி மேல்நிலை பதிவாளர் உள்ளிட்ட 17 பேர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வருகின்ற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி

மருத்துவப் படிப்புக்கு தோ்வு: மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீா் வழங்க நடவடிக்கை தேவை: ஆட்சியரிடம் சுப்பையாபுரம் மக்கள் மனு

எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாய்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 515 மனுக்கள்

SCROLL FOR NEXT