பள்ளி மாணவர்கள் 
தமிழ்நாடு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக இதுதொடர்பான பரிந்துரையினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதுதொடர்பான முடிவினை மாநில அரசுகள் ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.

இதுதொடர்பாக மாநில அமைச்சரவையினைக் கூட்டி விவாதித்த பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே (2019-2020) பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த முடிவினை அடிப்படையாக வைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

SCROLL FOR NEXT