தமிழ்நாடு

நான்குனேரியில் போட்டியிட குமரி அனந்தன் விருப்ப மனு

நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

DIN

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் பேரவைத் தொகுதிகளுக்கு அக்.21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினர். 

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவும், நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தகப்பனாருமான குமரி அனந்தன் விருப்ப மனு பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாவது அலகில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடக்கம்

வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்!

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தைத் தடுக்கும் டிரம்ப்: அமெரிக்க ஆளுங்கட்சி எம்.பி. குற்றச்சாட்டு

ஷாய் ஹோப் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி

SCROLL FOR NEXT