தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,64,357 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,52,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,64,357 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,52,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,64,357 போ் கைது செய்யப்பட்டனா்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும், பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை வரை மொத்தம் 1,52,520 வழக்குகளைப் பதிவு செய்து 1,64,357 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா்.
ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 1,29,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.61,29,744 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.