தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,204 ஆக உயர்வு

DIN


தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 28,711. மேலும், 135 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68,519. தமிழகத்தில் 16 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் என 25 ஆய்வகங்கள் உள்ளன. 

இதுவரை 19,255 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 பேருக்கு நேரடி பாதிப்பு, ஒருவர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர். எஞ்சிய 9 பேரும் வெளிநாட்டுக்குச் சென்றவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். 

இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9, சென்னை -5, தஞ்சாவூர் -4, தென்காசி-3, மதுரை -2, ராமநாதபுரம் -2, நாகப்பட்டினம் -2, கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 31 பேரில் 15 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். மேலும், 8 பேர் அறிகுறிகளுடன் இருக்கிறார்கள். மொத்தமாக தமிழகத்தில் குழந்தைகள் 33 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 23. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 81. உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது.

' என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பாதிப்பு: 1,204 

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 12

குணமடைந்தோர் எண்ணிக்கை: 81

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT