தமிழகத்திற்கு கூடுதலாக விரைவுப் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின்போது தமிழகத்திற்கு அதிகளவில் விரைவுப் பரிசோதனை கருவிகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.