சென்னையில் தவறி கீழே விழுந்த முதியவருக்கு கரோனா
சென்னை அயனாபுரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தமிழ்நாடுசென்னையில் தவறி கீழே விழுந்த முதியவருக்கு கரோனா
சென்னை அயனாபுரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சென்னை அயனாபுரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 373 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அயனாபுரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்த முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த 8 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 22ஆம் தேதி அந்த முதியவர் மரணமடைந்தார்.
இதையடுத்து முதியவரின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பரிசோதனையில் முதியவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.