தமிழ்நாடு

உச்சம் தொடும் தங்கம் விலை: ஒரு சவரனுக்கு ரூ.224 உயர்வு

DIN


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்றும் உயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. 

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.41,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது வரை கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.10,850 வரை உயா்த்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டும் ரூ.3,584 வரை உயா்ந்தது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக, சா்வதேச பொருளாதாரத்தில் மந்தமும், தொழில்துறையில் தேக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி, அதில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதைதொடா்ந்து, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், ஜூலை 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகும் தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் விலை ரூ.41,500-ஐ நெருங்கியுள்ளது. வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.41,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயா்ந்து, ரூ.5,178 ஆக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT