காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஈரோடு சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
ஈரோடு சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சுஜில் கரையைச் சேர்ந்தவர் ரவி (50). இவர் அங்குள்ள வனப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை, எதிரே வந்த ரவியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.