தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ராணா கே.வி லட்சுமணனுக்கு நினைவஞ்சலி
ஈரோடு செங்குந்தர் நகர் பகுதியில் தென்னிந்திய மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் அதிமுக மாவட்ட கழக செயலாளர் ராணா கே.வி .லட்சுமணன் அவர்களுக்கு 20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு செங்குந்தர் நகர் பகுதியில் தென்னிந்திய மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் அதிமுக மாவட்ட கழக செயலாளர் ராணா கே.வி .லட்சுமணன் அவர்களுக்கு 20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வி.கோ. ஆப்டெக்ஸ் தலைவர் யுனிவர்சல் நந்தகோபால் முன்னிலை வகித்தார். ராணா கே.வி .லட்சுமணன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அவரது மகள் சக்தி , எஸ்.சி.எஸ் தலைவர் குப்புராஜ், மேற்கு கிளைச் செயலாளர் கவிஞர் பாலன், எஸ்.சி.எஸ் செயலாளர் முருகந்தபதி, செங்குந்தர் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினர் வஜ்ரவேல். ஓம் சக்தி வைரம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.