தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானப் பயணிகள் கடத்தி வந்த ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த, காசிமணி கொளஞ்சி, முருகன் சந்திரன் என்ற இரண்டு பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது, நான்கு பாலிதீன் கவர்களில் தங்கப் பசையை அடைத்து, பெல்ட் பகுதியில் அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள, 731 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT