தமிழ்நாடு

கருணாநிதி 2ம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

DIN


 
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

திமுக பொருளாளர் துரை முருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். 

அதைத்தொடர்ந்து, முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT