புதுவையில் இன்று 245 பேருக்கு கரோனா: மேலும் இருவர் பலி
புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 245 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM
புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 245 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதுச்சேரியில் 192 போ், காரைக்காலில் 6 போ், ஏனாமில் 47 போ் என மொத்தம் 245 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,624-ஆக உயர்ந்தது.
புதுவையில் 3,355 பேர் இதுவரை குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் 89 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். மேலும் 1,361 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் 819 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement