தமிழ்நாடு

எஸ்.பி.பி. உடல்நிலை கவலைக்கிடம்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பாடகா் எஸ்.பி.பி. கரோனா தொற்று பாதிப்புடன் கடந்த 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு திடீரென எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், எஸ்.பி.பி.யின் உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. மருத்துவக் குழுவினா் அவரது உடலின் ரத்த ஓட்டம் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT