மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை
மதுரையை தமிழகத்தின் 2- ஆவது தலைநகரமாக்க அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், மதுரையை தமிழகத்தின் 2 ஆம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது என்றும் கூறினார்.
இன்று நடைபெற்ற அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தில் இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பொதுச் செயலாளராக ஆர்.பி உதயகுமார் உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.