முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 நேரத்திற்கு 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
Chance of rain in 7 districts including Coimbatore for the next 48 hours
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 48 நேரத்திற்கு 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான ம பெய்யக்கூடம். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

நீலகிரி மாவட்டத்தில் தேவலா 4 செ.மீ மழையும், பந்தலூர் அவலாஞ்சி தலை 1 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →